tamilnadu

img

பெண்கள் அதிகமாக பங்கேற்கும் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்! - கே.பாலகிருஷ்ணன் உரை

மன்னார்குடி,பிப். 22 - பெண்கள் அதிகமாக எந்த போராட் டத்தில் பங்கு கொள்கிறார்களோ அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் இதை யாராலும் தடுக்க முடியாது.   இது உறுதி என்று கூத்தாநல்லூரில் நடை பெற்றுவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிரான தொடர் இருப்பு போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் கூறினார்.

போராட்டத்தின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு அவர்  மேலும் பேசியதாவது : இந்தியா முழுவ தும் நீங்கள்   போராளிகளாக மாறி இருக் கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் நரேந்திர மோடி இன்று கொண்டு வந்தி ருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இந்த  சட்டத்தை எந்த வகையிலும் அனு மதித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதிலும் நமது சகோதரி கள் வீதியில் இறங்கி போராடிக்கொண்டி ருக்கிறார்கள். சிலர் இது இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் தான் என்று நினைக்கிறார்கள்.  

இஸ்லாமியர்கள் மட்டும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. நாட்டின் 600க்கு மேற்பட்ட மிகச்சிறந்த நிபுணர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட கையெ ழுத்திட்டு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் இஸ்லாமியர்கள் கிடை யாது. மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலை ஞர் டி .எம். கிருஷ்ணா இந்த சட்டத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுகிறார். நாட்டின் மக்களை மத அடிப்படை யில் பிரித்து சின்ன சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை பயன்படுத்தி மிகப் பெரும் கலவரத்தை உருவாக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. இந்தியா வில் இருக்கிற அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இந்த சட்டத்திற்கு எதிராக களத்தில் நிற்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு வாரம் தமிழகத்தில்  ஒவ்வொரு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தினோம். 2 கோடியே 15 லட்சம் கையெழுத்துக்களை பெற்று குடியரசுத் தலைவரிடம்  கொடுத்தோம். கையெழுத்திட்ட அவர்கள் எல்லாம் முஸ்லிம்களா? இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் கள், பௌத்த மதத்தை சார்ந்தவர்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள். இல்லா தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.  அவை, வெறும் கையெழுத்துக்கள் மட்டு மல்ல. நாளை மோடியின் அரசியல் எதிர்காலத்தை  மாற்றப்போகும் வல்லமை பெற்றவை. உங்கள்  போ ராட்டம் . முஸ்லிம்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் உட்பட 8 கோடி தமிழர்க ளுக்காக நடத்தப்படுகின்ற போராட்ட மாகும்.

நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஒருவருக்காவது இந்த சட்டத்தால் பாதிப்பு இருக்கிறதா என்று சட்டமன்றத்தில் கேட்கிறார். தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்பட வேண்டுமானால் மக்கள் தொகை பதிவேட்டிக்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். முதலில் கணக்கெடுப்பு நடத்தி அதன்பிறகு குடியுரிமை பதிவேடு தயாரித்து அதற்குப்பிறகு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் போது தான் பாதிப்பு தெரியவரும். ஆனால் முதலமைச்சர் இப்போது கேட்கிறார், யாரேனும் ஒருவருக்கு பாதிப்பு உண்டா என்று.   நாட்டில் அசாமை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இது அமல்படுத்தப்பட வில்லை.

அசாமில்  மட்டும் தான்  அமல்படுத்தப் பட்டது அங்கே 19 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பது  இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இச்சட்டத்தால்  எத்தனை இலட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப் படும் என்பது அப்போதுதான்  தெரியவரும்.

மிகமோசமாக நாட்டின் பொருளா தாரம்  பாதிக்கப்பட்டுள்ளது.   நாட்டின்  அடிப்படை பிரச்சனைகளை விட்டுவிட்டு குடியுரிமை திருத்தச்சட்டத்தை கொண்டு வருவதில் மட்டும் மோடி அரசு தீவிரம் காட்டுகிறது. இச்சட்டத்தை எதிர்த்து தில்லி  ஷாகின்பாக்  பகுதியில் நமது பெண்கள் வீராவேசமாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இங்கே கூத்தாநல்லூரில் நீங்கள். போராடுவது நமது பிறப்புரிமையை குடியுரிமையை பாதுகாக்கவே . இங்கே நாம் இஸ்லாமி யர்களாக, கிறித்துவராக, இந்துவாக,  ஜெயினராக  இருந்தாலும் நாம் அனை வரும் பிறப்பால் தமிழர்கள் தான். உணர்வால் இந்தியர்கள்தான்.  அப்படித் தானே ஒற்றுமையாக வாழ்ந்து  கொண்டி ருக்கிறோம். அப்படித்தான் நமது பண்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நம்மை எல்லாம் மதவெறி யர்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.  எனவே அவர்கள் விரிக்கும் சதி வலை யில்விழுந்து விடக்கூடாது.     இன்று  போராட்டக்களத்தில் நீங்கள் தனிமை யாக இல்லை. நாட்டின் பெரும்பகுதி இந்துக்கள், இதர மதத்தைச் சார்ந்த மக்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

வழிகாட்டியது கேரளம்

இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட போது நாடே உறைந்து நின்றது. எப்படி தடுப்பது என்ன வழி என்று திகைத்து இருந்தபோது  இந்தியா வில் முதன்முதலாக கேரள முதலமைச்சர் பினராயி   இச்சட்டம் கேரள எல்லைக்குள் நுழைய விடமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார். பின்னர்தான் நாட்டில் மற்ற மாநிலங்க ளுக்கு தைரியம் வந்தது. தோழர் பினராயி விஜயன் அப்படி அறிவித்தது மட்டுமல்ல எதிர்க்கட்சியினர் அனை வரையும்  அழைத்து   சட்டமன்றத்தில் ஏகமனதாக  ஒரு தீர்மானத்தை நிறை வேற்றினார். கேரளசட்டமன்றத்தில் இத்தீர்மானத்தை  நிறைவேற்றிய போது நாடே கேரளத்தைதிரும்பிப் பார்த்தது. 70 லட்சம் கேரள மக்களை திரட்டி காசர் கோடு இருந்து கன்னியாகுமரி வரை  பிரம்மாண்டமான ஒரு மனிதச் சங்கிலி இயக்கத்தையும் நடத்தியது. இவற்றை எல்லாம் விட கேரள பட்ஜெட் அமர்வின் போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான நான்கு பக்கங்கள் அடங்கிய கவர்னர் உரையை கவர்னர் மறுத்த நிலையிலும் படிக்கவைத்து மற்ற மாநி லங்களுக்கு கலங்கரை விளக்கமாக  கேரளம் மாறியது. இதன் தொடர்ச்சியில்  பிஜேபி கூட்டணியில் உள்ளவர்கள் உள்பட 13 மாநில அரசுகள் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர். ஆனால்  தமிழ்நாட்டில்  நமது முதலமைச்சர் மறுத்துவிட்டார்.

நாம்தான் வெல்வோம்

நாட்டு மக்கள் இன்று மோடி சிறு பான்மை மக்களுக்கு எதிரானவர் என்று கூறுகிறார்கள். மோடி சிறுபான்மை யினருக்கு மட்டுமல்ல பெரும்பான்மை இந்துக்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே மோடி எதிரானவர் என்பதை  மக்கள் புரிந்துகொள்ள ஆரம் பித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் தங்க ளிடம்  வெல்லமுடியாத காவல்துறை, படைபலம் இருக்கின்றது என்றனர். அப்படிப்பட்ட ஆங்கிலேயரை 1947இல்  நாம் விரட்டி அடித்தோம். தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், வங்கா ளிகள், காஷ்மீரிகள்,  மராட்டியர்கள் என்றும் இந்து, முஸ்லீம், கிருத்துவர்   என்றும் உள்ள நம் இந்திய மக்கள் நரேந்திர மோடி அரசிற்கும் ஆர்எஸ்எஸ் சுக்கும் தகுந்த பாடத்தை கற்றுக்கொடுப் பார்கள் என்பது நிச்சயம்.

 அல்லாவை, இயேசு கிறிஸ்துவை, ஐயப்பனை வழிபடும் உரிமைகள் நாம் அனைவருக்கும் வேண்டும். வழிபடும் முறைகள், மதங்கள்வேறு வேறாக இருந்தாலும் வாழும் முறையும் வாழ்க்கை பிரச்சனைகளும் எப்போதும் ஒன்றுதான். நாமெல்லாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்தான். இந்த அடிப்ப டையிலே நாம் அனைவரும் இந்தியர் கள் என்ற உயர்ந்த நிலையிலே ஒற்று மையாய் வாழ்வோம்.  இறுதியாக மாமேதை லெனின் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பெண்கள் அதிகமாக எந்த போராட்டத்தில் பங்கு கொள்கி றார்களோ அந்தப் போராட்டம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மாமேதை லெனின் கூறினார். இன்று இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை சகோதரிகளே, உங்களால் உருவாகி உள்ளது. ஒரு காலத்தில் வீட்டிற் குள்ளே இருந்துகொண்டு சமூகத்தில் நடப்பதைப் பற்றி கவலை கொள்ளாமல் இருந்த நீங்கள் இன்று நாட்டிற்கு ஒரு கேடு வந்துள்ளதை அறிந்து வீறு கொண்டு வீதிக்கு வந்து இருக்கிறீர்கள் என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் போராட்டம் எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  உரையாற்றினார். ஒருகட்டத்தில்  இரவு எட்டு மணியளவில்  மின் விளக்கு அணைந்தது. அப்போது போராடும் பெண்களின்  ஆயிரம் செல்போன் டார்ச் ஒளி அரங்கத்தில் உயர்ந்தது. அரங்கத்திற்கு ஒளியூட்டியது.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், நா. பாலசுப்பிரமணி யன், எம். சேகர்,  வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். சலாவுதீன், மாவட்ட செயலாளர்  கே. ஜோதிபாசு ஆகி யோர் கலந்து கொண்டனர்.